KNOW ABOUT
Who We Are?
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் பறிக்கப்பட்ட உரிமைகளை மீட்போம்!
i) a. முன்னிலை அரசு கல்வி நிறுவனங்களில் (Anna University, IIT,IIM உட்பட்ட), அட்மிஷனில் முன்னுரிமை பெற, படிப்புக்கு அரசு உதவித்தொகை மற்றும் சலுகை பெற,
b. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் வேலை வாய்ப்பு, அதன்பின் பதவி உயர்வில் முன்னுரிமை பெற,
c. தொழில் துவங்குதல் மற்றும் தொழிற்கடன், இதரபல மத்திய – மாநில அரசு சார்ந்த செயல்பாடுகளில் முன்னுரிமை பெற – பிற்படுத்தப்பட்ட (BC) இட ஒதுக்கீடு மிக மிக அவசியம்,
d. மாணவராக இருந்தாலும், தனியார் நிறுவனங்களில் பணி புரிந்தாலும், அரசுப்பணியில் இருந்தாலும், தொழில் முனைவராக இருந்தாலும், அரசின் அனுமதிகள் – உதவிகள் இல்லாமல் எந்த ஒரு காரியமும் நடைபெற முடியாது. அரசு என்பது அரசு அதிகாரிகள் தான். அந்த அரசுப் பணியில் பிற்படுத்தப்பட்டோர் வர முடியாத நிலை உருவாகி வருகிறது. இது தொடர்ந்தால் நம் சமூகம் – சந்ததிகள் மிகமிக அவல நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
ii) எந்தெந்த சமூகத்தினர் பிற்படுத்தப்பட்டோர் (Backward Classes) பட்டியலில் உள்ளனர்? (i) கொங்கு வேளாளர் (ii) தேவர் (அகமுடையார், கள்ளர் ஒருசில பகுதியிலுள்ள மறவர்) (iii) நாடார் (iv) ஒக்கலிகர் (v) முதலியார் (vi) ரெட்டியார் (viii) செட்டியார் [தேவாங்கர், 24மனை செட்டியார், வானிய செட்டியார்] (viii) யாதவர் (கோனார் அனைத்துப் பிரிவினர்). (ix) முத்துராஜா (x) வேளாளர் (சோழிய வேளாளர்……….) மற்றும் 133 சமூகத்தினர் (மொத்தம் 143 சமூகத்தினர்).
iii) மிகப் பிற்படுத்தப்பட்டவர் (Most Backward Classes): அனைத்து வன்னிய சமூகத்தினர், மறவர், வேட்டுவ கவுண்டர், இசை வேளாளர் உட்பட 41 வகுப்பினர் (இப்பட்டியலில் உள்ள மேற்சொன்ன சமூகத்தினரைத்தவிர சுமார் 35 சமூகத்தினர் தமிழகத்தில் சொற்ப அளவிலேயே உள்ளனர்).
1.) மாநில அரசு:- | |
1.1) BC – பிற்படுத்தப்பட்டோர் | 26.5% |
1.2) இஸ்லாமியர் | 3.5% |
1.3) MBC – மிகப்பிற்படுத்தப்பட்டோர் (*) | 20% |
1.4) SC and ST – பட்டியல் இனத்தவர் | 19% |
1.5) Open Quota – பொதுப்பிரிவு | 31% |
2.) மத்திய அரசு:- | |
2.1) OBC – மற்ற பிற்படுத்தப்பட்டோர் | 27% (முக்கிய குறிப்பு: இதில் Creamy Layerக்கு இட ஒதுக்கீடு இல்லை) |
2.3) SC and ST – பட்டியல் இனத்தவர் | 22.5% |
2.4) EWS – பொருளாதாரத்தில் பின்தங்கியோர் | 10% |
2.5) Open Quota – பொதுப்பிரிவு | 40.5% |
- அகில இந்திய அளவில் (மத்திய அரசில்) 1950-ஆம் ஆண்டு முதல் 1992-ஆம் ஆண்டு வரை, இதர பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களான OBC- மக்களுக்கு இட ஒதுக்கீடே கொடுக்கப்படவில்லை.
- 1992-ஆம் ஆண்டு இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்புக்கு பின் OBC மக்களுக்கு இட ஒதுக்கீடு 27 சதவீதம் கொடுக்கப்படும் இன்று வரை OBC – மக்களுக்கு 18 சதவீதம் பணியிடங்கள்தான் மத்திய அரசில் வழங்கப்பட்டுள்ளது இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டில் “Creamy Layer” – பிரிவினர் எந்த நிபந்தனை உருவாக்கப்பட்டு, “Creamy Layer” தொகுப்புக்கள் வரும் OBC மக்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது.
- மத்திய அரசு செயலகத்தில், Cabinet Additional Secretary – க்கு மேல் உள்ள பதிவுகளில், OBC மக்களின் பிரதிநிதித்துவம் (Representation), 5% – க்கு கீழ் உள்ளது. மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் (IIT, IIM, NIT etc.,) இடஒதுக்கீடு அமல் படுத்தப்படாத நிலை உள்ளது
- இந்திய அரசியலமைப்புச் சட்ட ஷரத்து – 340 மற்றும் பல்வேறு உச்ச நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக, ஒவ்வொரு 10 ஆண்டும் ஜாதிவாரி கணக்கு , உயர்கல்வி, அரசு பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை பற்றி கணக்கெடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்ட மக்களுக்கு சலுகை – முன்னுரிமை கொடுக்கப்படுவது இல்லை.
- ஏற்கனவே மத்திய அரசின் அனைத்து பதவிகளிலும் 54%-ம், உயர் பதவிகளில் 75%-ம் உள்ள முன்னேறிய வகுப்பினருக்கு (Forward Communities), எவ்வித நேர்மையான புள்ளி விவரங்களும் இல்லாமல், அவர்கள் எவ்வித கோரிக்கை – போராட்டமும் இல்லாமல் 10% இட ஒதுக்கீடு (EWS–10%) கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை மொத்தம் முன்னேறிய சமுதாயத்தினரின் எண்ணிக்கை 4% – ம் மட்டுமே. ஆக, 4% மக்களுக்கு 10% இட ஒதுக்கீடு. இதன்மூலம், முன்னேறிய வகுப்பினரின் ஆதிக்கத்திற்கு சட்டபூர்வமான வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அளவில் (மாநில அரசு)
a. OBC மக்களுக்கு 1980 முதல் 1989 வரை கொடுக்கப்பட்டு வந்த 50% இட ஒதுக்கீடு, அம்பாசங்கர் ஆணையத்தின் புனையப்பட்ட, ஒரு சமுதாய சார்பான புள்ளி விவரங்கள் அடிப்படையில், 1985 ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த அரசு ஆணைகளுக்கு எதிராக, எவ்வித காரணங்களையும் விளக்கி முறைப்படி செயல்படாமல், அரசியல் – ஓட்டு வாங்கி காரணமாக, ஒரு குறிப்பிட்ட சமுதாயம் பயன்பெறும் வகையில், பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 30% என்றும், மிகப்பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு 20% என்றும் உடைக்க / பிரிக்கப்பட்டது.
b. பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் எண்ணிக்கை – ஜனத்தொகை கணிசமாக இருந்தும், பிரிக்கப்பட்ட 30% இட ஒதுக்கீட்டில் 5% – இஸ்லாமிய சகோதர / சகோதரிகளுக்கு வழங்கப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு 26.5% குறைக்கப்பட்டது.
c. இடஒதுக்கீட்டிற்கு சிபாரிசு செய்யக்கூடிய சட்ட அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (TNBC) ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதிக்கத்தின் 32 வருடங்கள் செயல்பட இதுவரை ஆண்ட அரசுகள் அனுமதித்தன. அதன் விளைவு, உண்மையாக புறக்கணிக்கப்பட்ட சமுதாயங்களில் குரல்வளை நெரிக்கப்பட்டு அவர்கள் குரல் அற்றவர்களாக ஆக்கப்பட்டனர்.
d. மாநில அரசில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களுக்கு தற்போது உள்ள5% இட ஒதுக்கீட்டால் எவ்விதப் பயனும் இல்லை. BC – மாணவர்களில் சொற்ப எண்ணிக்கையினருக்கு தான் கல்வி உதவித்தொகை கிடைக்கிறது. பின்னடைவு பணியிடங்கள் (Backlog Vacancy) சலுகை நிராகரிக்கப்பட்டுள்ளது.
e. மராட்டியம், பீகார், கர்நாடகா போன்ற மாநிலங்களில், OBC ஜாதிவாரிகணக்கெடுப்பு எடுக்கப்பட்டு அதற்கு தகுந்தாற்போல், OBC மக்களின் இட ஒதுக்கீடு திருத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் கடந்த 2020-ல் நியமிக்கப்பட்ட குலசேகரனின் ஆணையமும் செயலற்றதாக – மூடு விழா செய்யப்பட்டுள்ளது. நம் மாநிலத்தில் தங்களுக்கென (எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில்) MBC – இட ஒதுக்கீடு பெற்ற சமூகத்தினரில், மிக அதிகமாக பயன் அடைந்தவர்கள் – இன்று போராட்டங்களில் ஈடுபடும் ஒரு சமூகத்தினர், தங்களின் திட்டமிட்ட அரசியல் – அதிகார செல்வாக்கின் மூலம் கடந்த 30 வருடத்தில், அரசுப் பணிகளிலும் – தொழிற்கல்வியிலும் இன்று சுமார் 17% சதவீதத்திற்கு மேல் உள்ளனர். இச்சமூகத்தினர் பொது ஒதுக்கீட்டிலும் போட்டியிட்டு அரசுப்பணி மற்றும் கல்வி அட்மிஷன்கள் பெறுகின்றனர்.
ஆனால், பிற்படுத்தப்பட்டவர்கள் குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் எந்தவிதமான உண்மையான, பயனுள்ள, சலுகையையும் பெற முடிவதில்லை. இட ஒதுக்கீட்டின் உண்மையான பயனை – சமூக நீதியை நாம் பெறுவதை பறித்து, மாநிலத்திலும் – மத்தியிலும் நமது அனைத்து வாய்ப்புகயையும் தொடர்ந்து அழித்துக்கொண்டுள்ளனர்.
இந்நிலையில் உண்மையான ஒதுக்கீடு பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க, நாம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசித்து – முடிவு செய்ய, அரசியல் சாராத – “பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் பாதுகாப்பு கூட்டமைப்பு” (Society for the Rights of – Backward Classes) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்த உள்ளோம். இவ்வமைப்பானது முழுக்க முழுக்க பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பிற்கு மட்டுமே. இது அரசியல் – தேர்தல்களில் எவ்விதத்திலும் பங்கேற்காது.

